Search This Blog

Tuesday, May 21, 2013

ஆத்திச்சுடி மொத்தம் 108:-

1. அறஞ்செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண்ணெழுத் திகழேல்.

8. ஏற்ப திகழ்ச்சி.

9. ஐய மிட்டுண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவ தொழியேல்

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

14. கண்டொன்று சொல்லேல்.

15. ஙப்போல் வளை.

16. சனிநீ ராடு.

17. ஞயம்பட வுரை.

18. இடம்பட வீடெடேல்.

19. இணக்கமறிந் திணங்கு.

20. தந்தைதாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர்செய்.

23. மண்பறித் துண்ணேல்.

24. இயல்பலா தனசெயேல்.

25. அரவ மாட்டேல்.

26. இலவம்பஞ்சிற் றுயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகலா தனசெயேல்.

29. இளமையிற் கல்.

30. அறனை மறவேல்.

31. அனந்த லாடேல்.

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப் படவாழ்.

35. கீழ்மை யகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்ப தொழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்.

41. கொள்ளை விரும்பேல்.

42. கோதாட் டொழி.

43. கௌவை அகற்று.

44. சான்றோ ரினத்திரு.

45. சித்திரம் பேசேல்.

46. சீர்மை மறவேல்.

47. சுளிக்கச் சொல்லேல்.

48. சூது விரும்பேல்.

49. செய்வன திருந்தச்செய்.

50. சேரிடமறிந்து சேர்.

51. சையெனத் திரியேல்.

52. சொற்சோர்வு படேல்.

53. சோம்பித் திரியேல்.

54. தக்கோ னெனத்திரி.

55. தானமது விரும்பு.

56. திருமாலுக் கடிமைசெய்.

57. தீவினை யகற்று.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

59. தூக்கி வினைசெய்.

60. தெய்வ மிகழேல்.

61. தேசத்தோ டொத்துவாழ்.

62. தையல்சொல் கேளேல்.

63. தொன்மை மறவேல்.

64. தோற்பன தொடரேல்.

65. நன்மை கடைப்பிடி.

66. நாடொப் பனசெய்.

67. நிலையிற் பிரியேல்.

68. நீர்விளை யாடேல்.

69. நுண்மை நுகரேல்.

70. நூல்பல கல்.

71. நெற்பயிர் விளை.

72. நேர்பட வொழுகு.

73. நைவினை நணுகேல்.

74. நொய்ய வுரையேல்.

75. நோய்க்கிடங் கொடேல்.

76. பழிப்பன பகரேல்.

77. பாம்பொடு பழகேல்.

78. பிழைபடச் சொல்லேல்.

79. பீடு பெறநில்.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

81. பூமி திருத்தியுண்.

82. பெரியாரைத் துணைக்கொள்.

83. பேதைமை யகற்று.

84. பையலோ டிணங்கேல்.

85. பொருடனைப் போற்றிவாழ்.

86. போர்த்தொழில் புரியேல்.

87. மனந்தடு மாறேல்.

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

89. மிகைபடச் சொல்லேல்.

90. மீதூண் விரும்பேல்.

91. முனைமுகத்து நில்லேல்.

92. மூர்க்கரோ டிணங்கேல்.

93. மெல்லினல்லாள் தோள்சேர்.

94. மேன்மக்கள் சொற்கேள்.

95. மைவிழியார் மனையகல்.

96. மொழிவ தறமொழி.

97. மோகத்தை முனி.

98. வல்லமை பேசேல்.

99. வாதுமுற் கூறேல்.

100. வித்தை விரும்பு.

101. வீடு பெறநில்.

102. உத்தம னாயிரு.

103. ஊருடன் கூடிவாழ்.

104. வெட்டெனப் பேசேல்.

105. வேண்டி வினைசெயேல்.

106. வைகறைத் துயிலெழு.

107. ஒன்னாரைத் தேறேல்.

108. ஓரஞ் சொல்லேல்.

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்

சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
எண்ணெய் - 200 கிராம்
பட்டர் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - 1/2 லிட்டர்
ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
பிரிஞ்சி இலை - 2
ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 2
ஜாதிபத்திரி - சிறிதளவு
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும்.

தயாரிப்பு : தனிஷா