Search This Blog

Thursday, November 14, 2013

மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க

பெரும்பாலும்
மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும்
பாம்பு ,நாய் , போன்ற
நச்சு விடங்களை நீக்குவது பற்றி நாம்
கதைப்போம் .
பொரும்பாலும் இந்த
நச்சு விடங்களினால்
உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு ,
பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட
நிலையில் அதன் குணத்தைக் காட்டும் .
எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக
கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த
விடமனாலும் .
அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள
வேண்டும் .
நாய்க்கடி
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10
கிராம் எடுத்து வூமத்தன் விதை 10
கிராம் சேர்த்து பசுவின்
பால்விட்டு அரைத்து நாள்தோறும்
மூன்று நாள் கொடுக்கவும் .(அ )
சிறியாநங்கை இலை 5 அ 10
எடுத்து உடனே மென்று தின்னவும்
விடம் நீங்கும் .
இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம்
தின்னாமல்
வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர
விடம் நீங்கும் .
சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும்
வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம்
உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த
இடத்தில் பூச வேண்டும் .
சிறியாநங்கை மூலிகை பொடி கால்
தேக்கரண்டி தேன் / தண்ணீர்
கலந்து மூன்று நாள் காலை ,
மாலை உண்டுவர விடம் முறியும் .
வண்டுகடி
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் ,
பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும்
இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம்
நீங்கும்.
செய்யான் விடம்
தேங்காய்
துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த
விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து
பாலில் அருந்த விடம் முறியும்.
பூரான்
இது கடித்தால் தோலில்
தினவு எடுக்கும் . பூரான்போல்
தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட
உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க
விடம் நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின்
சாறு அருந்தலாம் .
அரைத்து ஐந்து கிராம்
எடுக்கலாம் .விடம் முறியும் .
விரியன் பாம்பு
இதில் பல
வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால்
சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர்
வடியும் . கடுப்பு உண்டாகும் .
இதற்க்கு பழைய
வரகு அரிசி இருநூருகிரம்
கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம்
ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால்
கலந்து மூன்று நாள்
உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .
நல்ல பாம்பு
நேர்வாளம் பருப்பை சுண்ணம்
செய்து வெற்றிலை பாக்கு போல்
மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல்
உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25
மிலி எடுத்து மிளகு பத்து கிராம்
அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன
விடம் முறியும் .
தேள்
தேள் கொட்டிய வுடன் தேங்காய்
துருவி பால்
எடுத்து இருநூறு மிலி அருந்த விடம்
முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம்
குப்பை மேனி சாற்றில்
மூன்று வேலை அருந்த விடம்
முறியும் .
எலிக்கடி
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி
இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள்
எடுக்க விடம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில்
கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த
விடம் முறியும் .
மனிதன் கடித்தால் (அருள்
கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள்
மனிதனையே கடிக்கிறார்கள் )
சிருகுரிஞ்சன் ஒருகிராம்
இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க
விடம் நீங்கும். சிவனார்
வேம்பு ஒருகிராம்
ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம்
நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம்
இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க
விடம் நீங்கும். பொன்னாவிரை கால்
தேக்கரண்டி உணவுக்கு பின்
ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க
விடம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர்
காலத்தில் தோன்றும்
நோய்களை வென்று வாழ்வோம்.
சித்தமருத்துவம் காப்போம் நோய்
வெல்வோம

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை

பொதுவாக மஞ்சள் காமாலை நோய்,
பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல்
செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதப
போதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர்
குடலுக்கு வருகின்ற பாதையில்
ஏற்படும் அடைப்பினாலும்
காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த
சிவப்பணுக்கள் அழிவதினாலும்,
பிறவிலேயே ரத்தத்தில் உள்ள
பிலிரூஃபின் அளவு அதிகரித்துக்
காணப்படுவதாலும், காமாலை நோய்
வைரஸ் கிருமிகளாலும், சில
வகை மருந்துகளினாலும்,
மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி,
குமட்டல், பசியின்மை, மலக்கட்டு,
கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர்
போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும்
அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில்
கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடி
யை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய்
அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும்,
கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய்
அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர்
நீர் சேர்த்து அரை டம்ளராக
வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30
மிலி எடுத்து அதில் மிளகுத் தூள்,
சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த
இலை இரண்டையும்
பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம்,
உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன்
உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம
அளவு எடுத்துப் பொடித்து அதில்
அரை ஸ்பூன் எடுத்து நீரில்
கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன்,
சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில்
அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம்
ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும்,
கீழாநெல்லியையும்
சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள்
காலையில்,
சிறு எலுமிச்சை அளவு உண்டு,
பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன்
உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர்
காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில்
ஊறவிட்டு பொடித்தப்
பொடி நான்கு கிராம்,
சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப்
பொடி இரண்டு கிராம் கலந்து அதில்
ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15
மிலி எடுத்து மஞ்சள் பொடி கால்
ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப்
பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30
மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30
மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி,
அதில் இரண்டு டம்ளர் நீர்
விட்டு அரை டம்ளராக
காய்ச்சி அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன்
வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம்,
மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி,
தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

நொறுங்க தின்னா... நூறு வயசு

'நொறுங்க தின்னா...
நூறு வயசு'னு சொலவடை சொல்லுவாங்க
ஊரு காட்டுல. ஆனா, நுனிப்புல்
மேயுறது கணக்கா கண்டதையும்
அரைச்சிட்டு, வேலை அவசரத்துல
ஓடறவங்கதான் இப்பல்லாம் ஜாஸ்தி.
அதனால... ஜீரணக்கோளாறு,
வயித்து உப்புசம்னு அன்னாடம்
ஏதாச்சும்
ஒண்ணு புறப்பட்டு நின்னு ஆளை ஆட்டிப்படைக்குத
ு. அதையெல்லாம் விரட்டியடிக்கற
வழிமுறைகளை பார்ப்போம்.
ஆறு மாசத்துல
இருந்து மூணு வயசு வரை உள்ள
கொழந்தைங்களுக்கான வைத்தியம்:
கால் ஸ்பூன் ஓமம் எடுத்துக்கோங்க.
அதை ஒரு சட்டியில
போட்டு வெடிக்கிற வரைக்கும்
நல்லா வறுங்க. பிறகு, கால் டம்ளர்
தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க.
தண்ணி நல்லா சுண்டி ஒரு பாலாடை (சங்கு என்றும்
கூறுவார்கள்) அளவு வந்ததும்
இறக்கி வச்சுருங்க.
அதை கொழந்தைங்களுக்க
ு கொடுத்தீங்கனா... வயித்து உப்புசம்,
பசியில்லாம
வயிறு மொத்து மொத்துனு இருக்கறது,
எப்பப் பாத்தாலும்
அழுதுகிட்டே இருக்கறது மாதிரியான
எல்லா பிரச்னைகளும் சரியாயிரும். சில
பிள்ளைக
தண்ணி தண்ணியா வெளிக்கு போகும்.
அதுவும்கூட இந்த வைத்தியத்துக்கு
கட்டுப்படும்.
பேய்மிரட்டி இலை - 4, சீரகம் - கால்
ஸ்பூன்... இது ரெண்டையும்
ராத்திரியே ஒரு சட்டியில போட்டு,
அரை டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க
வைங்க. மறுநாள் காலை யில
எடுத்து பிழிஞ்சி,
ஒரு பாலாடை அளவு கொழந்தைங்களுக்க
ு கொடுத்தா... வயிறு சம்பந்தமான
பிரச்னையெல்லாம் பட்டுனு காணாம
போகும்.
பெரியவங்களுக்கான வைத்தியம்:
இஞ்சித் துவையல். இது எல்லாருக்கும்
தெரிஞ்சதுதான். ஆனா, அதோட
மகத்துவம் இருக்கே... அதுதான்
பலபேருக்கு தெரியாது.
வயிறு சம்பந்தமான பிரச்னைனா...
அதுக்கு மிஞ்சின வைத்தியம் எதுவும்
இல்லைனே சொல்லலாம். இஞ்சியோட
தோலை சுத்தமா எடுத்துட்டு,
நல்லெண்ணெய் விட்டு வதக்கி புளி,
உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த
உளுந்தம்பருப்பு
சேர்த்து அரைச்சி சாப்பிடுங்க,
செரிமானக்கோளாறெல்லாம்
காத்தா பறந்துரும்.
பிரண்டைத்தண்டு. நல்ல இளந்தண்டா 10
கணு எடுத்துக்கோங்க.
அதை நல்லெண்ணெய் விட்டு வதக்கி...
புளி, உப்பு, காஞ்ச மிளகாய், வறுத்த
உளுந்தம்பருப்பு
சேர்த்து அரைச்சி சாப்பிட்டீங்கனாலும்
கோளாறு போயே போயிரும்.
அதுமட்டுமில்ல... சாப்பாடும் கூட
கொஞ்சம் இழுக்கும்.
வயித்து உப்புசம், திடீர்
வயித்துவலினு சிலர் படாத
பாடுபடுவாங்க.
உடனே ஒரு கைப்பிடி முருங்கை இலையை உருவுங்க,
காம்பெல்லாம் தள்ளிட்டு... கால் ஸ்பூன்
உப்பு சேர்த்து நல்லா கசக்குங்க. அதுல
வர்ற சாறை அப்பிடியே குடிச்சிருங்க.
கசக்குறப்ப கைவிரல் நடுவுல
வடிஞ்சிருக்கற சாறை வயித்துல
தடவுங்க, வயித்துவலி வந்த வழியைப்
பாத்து ஓடியே போயிரும் ஓடி!

வெள்ளைப்படுதல் - ரத்தசோகை - முக வறட்சி - முகப்பரு

வெள்ளைப்படுதல் குணமாக:
சின்ன வயசுலயே சில
பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல்
அதிகமாகி பாடாபடுத்தும்.
படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல...
அதை வாங்கி, மண்சட்டியில
போட்டு நல்லா பொரிக்கணும்.
மாசிக்காயை தூளாக்கி, படிகாரம்
எவ்வளவு இருக்கோ...
அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு
ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல
கால் ஸ்பூன் அளவு எடுத்து,
வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல
ஒரு தடவை, சாயங்காலம்
ஒரு தடவைனு சாப்பிடணும். 10
நாள்லயே குணம் கிடைக்கும்.
ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும்
சாப்பிட்டு முடிக்கறது நல்லது.
ரத்தசோகை சரியாக:
வயசுப் புள்ளைங்க ஒழுங்கா சாப்பிடாம,
'விதி'யேனு கெடக்குறதுதான்
இப்பல்லாம் ஃபேஷனுனு பேசிக்கறாங்க.
ஆனா, இதுவே காலப்போக்குல
ரத்தசோகை வர்றதுக்கு காரணமாயிடும்.
அப்படிப்பட்டவங்களுக்கு கீழாநெல்லிச்
சமூலத்தை (வேர் முதல்
பூ வரையிலான முழுச்செடி)
அரைச்சி,
ஒரு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து பால்ல
கலந்து குடிச்சிட்டு வந்தா 10 நாள்ல
ரத்தசோகை குணமாகும்.
தேவைனா தொடர்ந்து சாப்பிடலாம்.
மார்பு பகுதியில் வரும் புண் ஆற...
மார்புல சில பொண்ணுகளுக்கு புண்
வந்து பாடாபடுத்தும். அதுக்கு கைவசம்
மருந்து இருக்கு. காசுக்கட்டி 5 கிராம்
அளவு எடுத்து, சுத்தமான தண்ணியில
கரைச்சி, புண் வந்த இடத்துல
தடவிட்டு வந்தா ரெண்டு, மூணு நாள்ல
ஆறிரும். நல்லா குணமாகுற வரைக்கும்
மருந்து போடலாம், தப்பில்ல.
முக வறட்சி விலக:
குங்குமப்பூ- அரை கிராம், சந்தன
பவுடர்- 10 கிராம், மஞ்சள்தூள்- 5 கிராம்,
நெல்லிக்காய்கந்தகம் -1 கிராம்...
இதெல்லாத்தையும்
ஒண்ணா சேர்த்து பவுடராக்கிடணும்.
அதுல கொஞ்சம் பன்னீர் விட்டு அரைச்சி,
15 கிராம் வெண்ணெயில
அதை குழைச்சி,
கண்ணாடி கோப்பையில பத்திரப்படுத்தி
வச்சிக்கிடணும். அதுல
ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து ராத்திரி,
ராத்திரி முகத்துல
தேய்ச்சிட்டு வந்தீங்கனா... அழுக்கு,
வறட்சியெல்லாம் பஞ்சா பறந்து போய்,
முகம் பளபளக்கும். தேவைப்படுறப்பயெ
ல்லாம் இதைச் செய்யலாம்.
முகப்பரு விலக:
கடலை மாவை விளக்கெண்ணெயில
கலந்து முகப்பருவுல
பூசி ஒரு மணி நேரம்,
இல்லைனா ரெண்டு மணி நேரம்
கழிச்சி குளிச்சிட்டு வந்தீங்கனா...
பரு மாயமா மறஞ்சிரும்.

பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல்
ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல
பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம்
பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர்
கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற
ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும்
துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள்
பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த
அமெரிக்க, ஆங்கிலேயத்
தொலைக்காட்சி நிறுவனங்கள் -
இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத்
தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில்
மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவி
ல்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள் தொடர்பான செய்திகள்,
தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல்
ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட
முதல்கட்ட ஆய்வுகளிலேயே,
பூம்புகார் நகரின்
சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில்
பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால்,
இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப்
பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச்
சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில்
உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய,
இந்திய அரசு பல கோடிகளைச்
செலவிட்டது. அப்போதெல்லாம்
பற்றாக்குறை பற்றிய
பேச்சு எழவில்லை. துவாரகையில்
எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம்
துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச்
சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின்
ஆய்வுகள் தமிழர்களின்
தொன்மையை வெளிப்படுத்தி விடும்
என்று சிலர் கருதியதின் விளைவாகவே,
ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில்
ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள்
தமிழகத்தில் வெளியிடப் படவில்லை.
மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும்
கண்காட்சியில் காட்டப்பட்டது.
இப்படங்களும், ஊடகங்களில்
வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த
ஆய்வுப் படங்களைக் காட்ட
அனுமதி வழங்கப்படவில்லை.
8.
தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில்
வெளியிட இயலாமற் போனதால்.
இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்
நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத்
தொலைக்காட்சிகளில்
இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம்,
தமிழருக்கெதிரான
நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார்
அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள்
தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால்,
பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு,
கோவாவிலுள்ள இந்தியக் கடல்
ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத்
தரவில்லை.
13. தமிழரின்
வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான
வேலைகளில், சில ஆதிக்க சக்திகள்
முன்னின்று செயல்படுவதைத்
தடுத்து நிறுத்த எவரும்
முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய
நடவடிக்கைகளை இதுவரையிலும்
மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த
வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல்
பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள
அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின்
வரலாறு மறைக்கப்படுகின்
றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள்
சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகள். நம்பகத்தன்மையுட
ையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான
செய்திகளையும் சிலர்
திட்டமிட்டே பரப்பி வருகின்றனர்.
எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்
றவைகளாவுள்ளன என்ற
விளக்கத்தை எவரும் அளிக்க
முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய்
எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப்
பணிகளின் போது, குசராத் கடல்
பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட
ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர்
முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச்
சென்று ஆய்வுக்கூடத்தில்
(சகானி ஆய்வுக்கூடம், டெல்லி)
ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த
நிறுவனம் பல இடையூறுகள்செய்தது.
இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம்,
அந்த பொருள், உடைந்து போன
மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும்.
அதன் அகவை கி.மு. 7500 என்றும்
அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு,
சிந்துவெளி நாகரிகத்தின் காலம்.
கி.மு. 7500
ஆண்டுகளுக்கு முற்பட்டது என
அறிவித்தது. (The New Indian Express,
Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட
அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம்,
செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம்
ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக்
கேட்டதற்கு, அதற்கு அமைச்சர்,
அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத்
திரும்ப அதே பதிலைக் கூறினார்.
ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள்
இல்லாததாலும், தமிழர் நாகரிகம்
என்று கூற மனம் இல்லாததாலும்,
அது இந்திய
நாகரிகமே என்று மழுப்பலாகச்
சொன்னார். இந்த நிகழ்ச்சியும்,
செய்தித்தாளில் தெளிவாகச்
சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர்
பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக்.
115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும்
தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள்
அண்மைக்கால
ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம்
இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும்
சிறப்பு தமிழரின்
தொன்மையை வெளிப்படுத்தும்
பூம்புகாருக்கோ.
சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய
அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல்
இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர்
இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப்
பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம்
மறக்க முடியாது. ஆரியர்தாம்
இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப்
போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட
செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம்,
மொரார்ஜி தேசாய் எழுப்பிய
கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட
போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப்
பழமையை பொய்யாக உருவாக்கப்
பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான
பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகி
ன்ற பூம்புகாரோ இந்திய அரசால்
இன்று வரை உரிய கவனம்
செலுத்தப்படாமல்
இருப்பதோடு வெளிநாட்டார்
இது குறித்து செய்த ஆய்வுகள்
தமிழருக்கு மிகச் சிறப்பைக்
கொடுக்கின்றது என்ற
ஒரே காரணத்திற்காக
இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய
நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின்
மாண்புகளை, தொன்மைச்
சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட
ஆய்வாளர்கள் பலர் எழும்ப
வேண்டியது காலத்தின் கட்டாயமாக
உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011
இதழில் வெளிவந்தது)
[பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில்
முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்
து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில்
கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல்
ஆய்வாளர் 200102ல்
ஆய்வு மேற்கொண்டார்.
அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார்.
அது 11 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்.
அவருடைய கருத்தை டர்காம்
பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன்
மில்னே உறுதி செய்தார்.
பூம்புகார் நாகரிகம்
சிந்துவெளி நாகரிகத்தைவிட
மேம்பட்டது என்றும் ஹான்காக்
தெரிவித்தார். அமெரிக்கத்
தொலைக்காட்சி ஒன்று,
“அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர்
எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது.
அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom
under the High Seas என்ற பெயரில் நூலாக
வெளிவந்தது. (திரு நடன காசிநாதன்
பூம்புகாரில்
கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில
காரணங்களால்
அது தொடர்ந்து நடைபெறவில்லை).
மாமல்லபுரத்தின் கடலடியில், சில
கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள்
தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம்
ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம்
கடலுக்குள் மூழ்கி விட்டது.
இச்செய்தி கட்டுக்
கதை என்றே பேசப்பட்டு வந்தது.
ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள
அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல்,
பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள்
பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட
வேண்டும் இதுநிறைவேறினால் தொல்
தமிழரின் எல்லை விரிந்த
பெருமை சொல் கடந்து விளங்கும்.
(இக்கட்டுரையை எழுதியவர்
மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல்
2010).]

நாவிற்கு ருசியூட்டும் அருநெல்லி

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
உணவுகளில் கூட,
ருசி இல்லையயன்றால் அதனை நாம்
திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
ஏனெனில் உணவை சுவையாக
உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம்.
பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின்
ருசிக்கு மயங்கி பல மாதங்கள்
வரை வேறு எந்த சுவையையும்
விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும்
உட்கொண்டு வருவதுண்டு. நாம்
உண்ணும் உணவின்
ருசியை மூளைதான்
நமக்கு உணர்த்துகிறது என்றாலும்,
உணவின் தன்மையை நாக்கின்
சுவை அரும்புகளே புரிந்துக்
கொண்டு உணவின்
ருசியை மூளைக்கு கொண்டுச்
செல்கின்றன. நாக்கின்
சுவை அரும்புகள் பழுதுபட்டால்
உணவின் சுவையை உணர முடியாமல்
சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன.
இதனால் ருசியான உணவாக
இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள
பிடிக்காமல், உணவின் மேல்
வெறுப்பு உண்டாகிறது.
சுவை நரம்புகள் பல காரணங்களால்
தனது சுவை உணரும்
தன்மையை இழக்கின்றன. சுரம்,
காமாலை, வயிற்று கிருமிகள்,
இரத்தச்சோகை, சிறுநீரக
பாதிப்பு போன்ற நோய் நிலைகளில்
நாவின் சுவை நரம்புகள் தற்காலிகமாக
தங்கள் பணியை நிறுத்திக்கொள்வதால்
உணவின் சுவை தெரிவதில்லை. ஆனால்
நோய் சரியானதும் மீண்டும்
சுவை நரம்புகள் சீராக பணிபுரிகின்றன.
பக்கவாதம், முகவாதம், உமிழ்நீர்
கோளவீக்கம், புற்றுநோய் போன்றவற்றில்
நிரந்தரமாகவே நாவின்
சுவை அரும்புகள்
செயலிழந்து விடுகின்றன. நாவில்
ஏற்படும் புண்களும், வயிற்றின் கூடுதல்
அமிலச் சுரப்பும், நாவில் வளரும்
பாக்டீரியா மற்றும்
பூஞ்சை கிருமிகளும் கூட நாவின்
சுவையை மாற்றிவிடுகின்றன.
உண்ணும் உணவின்
சுவை தெரியாமலும், உணவின் மேல்
விருப்பம் இல்லாமலும்,
பசியின்மையாலும் தோன்றும்
ருசியின்மையை சித்த மருத்துவம்
அரோசகம் என குறிப்பிடுகிறது.
தூங்கிக்கொண்டிருக்கும் நாவின்
சுவை அரும்புகளை தட்டி எழுப்பி,
கபால நரம்புகளை தூண்டி உண்ணும்
உணவின் ருசியையும், தன்மையையும்
நாவிற்கும், மூளைக்கும் உணர்த்த
ஏராளமான உணவுப்
பொருட்களை நமது முன்னோர்கள்
உண்ணும் உணவில் பல்லாண்டுகளாக
பயன்படுத்தி வருகின்றனர். அருநெல்லி,
பிரண்டை, எலுமிச்சை, நாரத்தை,
துருஞ்சி போன்ற உணவுக்குப் பயன்படும்
பல மூலிகைகள் சர்பத், ஊறுகாய் போன்ற
பல வடிவங்களில் பக்குவப்படுத்தப
்பட்டு உண்ணும் உணவில்
அடிக்கடி சேர்த்துக்
கொள்ளப்பட்டு படுகின்றன.
இவை நாவின்
சுவை நரம்புகளை தூண்டி அரோசகத்தை நீக்குகின்றன.
இந்த உணவுகளில்
சிறுநெல்லி எனப்படும்
அருநெல்லிக்காயே
நாவிற்கு ருசியை உண்டாக்குவதில்
பெரும்பங்கு வகிக்கிறது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல்
பெயர் கொண்ட
யுபோர்பியேசியே குடும்பத்தைச்
சார்ந்த
அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம்
எனப்படும் ருசியின்மைக்கு காரணமான
இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின்
மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது.
அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம்
மற்றும் லூப்பியால் என்னும்
வேதிப்பொருள் நாவின்
சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த
சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.
அரு நெல்லிக்காயை அலசி, இடித்து,
கொட்டை மற்றும்
காம்பு நீக்கி நன்கு சுத்தம்
செய்து கொள்ள வேண்டும். வெந்தயம்,
மிளகாய்வற்றல் மற்றும்
பெருங்காயத்தை நன்கு வறுத்து,
பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி,
அதில் கடுகை போட்டு வெடித்தவுடன்
அருநெல்லிக்காயை நன்கு வதக்க
வேண்டும். பின்பு பொடித்து வைத்த
மிளகாயத்தூள், வெந்தயப்பொடி,
பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன்
பின் ஒன்றாக கலந்து, தேவையான
அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும்
கண்ணாடி பாட்டிலில்
அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள
வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும்
சுவையுடைய இந்த
அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக்
கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்க
ு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும்
வாந்தி, குமட்டமல் நீங்க
அரைநெல்லிக்காயுடன்
உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.