Search This Blog

Wednesday, April 27, 2016

நவரத்தினங்கள்

ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர்.
தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.
ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
நவரத்தினங்களான
மாணிக்கம், முத்து, மரகதம், புஷ்பராகம், பவழம், வைரம், வைடூரியம், நீலம், கோமேதகம்
1. நவரத்தினங்களின் பண்புகள் - மாணிக்கம்
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும்,இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .
பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும் . வெகுளித்தனமாகவும்,ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள் ,கவலை ,கருத்து வேறுபாடுகளை போக்கும் . இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .
மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும் . இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது .மன உறுதியையும் ,தன்னம்பிக்கையையும் கொடுக்கும் .இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும் .
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .
யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும் . எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம் .மேலும் கிருத்திகை,உத்தரம்,உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம் . எண்கணித படி 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம் . பிறந்த தேதி,மாதம்,வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும் , பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.

2. நவரத்தினங்களின் பண்புகள் - முத்து
முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்க்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும்.பேய்களை விரட்டும்.
முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும்தடைகளை முத்து போக்கும்.விலகிசென்ற நட்புகளையும்,உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது.அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும்.குடல் அழற்சி வராமல் காக்கும்.மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை,தூக்கமின்மை,ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.
யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் .சந்திரனுக்குறிய ரத்தினம் முத்து.எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ரோஹிணி,அஸ்தம்,திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம். எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்கள்,பிறந்த தேதி,மாதம்,வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும்,பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.மேலும், 7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் ,பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.

3. நவரத்தினங்களின் பண்புகள் - மரகத பச்சை
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும்,தீய சக்திகள்,பில்லி சூனியங்களில் இருந்து காக்கும்.போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும்.காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள்,மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும்.மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும்.நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும்.இருதய கோளாறு ,ரத்த கொதிப்பு,புற்றுநோய்,தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்
மிதுனம்,கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்.
4. நவரத்தினங்களின் பண்புகள் - புஷ்பராகம்
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும்.துணிச்சல் பிறக்கும்.பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும்.நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும்,மனம்அமைதியாக இருக்கும்.நிலம்,வீடு,வாகனம்,வாங்கும் நிலை உருவாகும்.பெரும் புகழ் கிடைக்கும் . பகை,சதி,சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும்.நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல்,இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு,மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு,மீன ராசிக்காரர்களும் புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்.
5. நவரத்தினங்களின் பண்புகள் - பவழம்
இந்தகல் பகுத்தறிவையும்,செயல் அறிவையும் ,துணிச்சலையும் கொடுக்கும் . அதிககோபம் ,பொறாமை,வெறுப்பு,கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும் .பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும் . முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும்.குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை
உருவாக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும்.அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள்,ரத்த சோகை,மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும்.பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும்,நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும்.மலட்டுதன்மையை போக்கும்.நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும்.சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்

6. நவரத்தினங்களின் பண்புகள் - வைரம்
உடல் உரம்,மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும் ,பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும் .கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும் .
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும் .இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு . சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும் .சக்கரை நோய் ,மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி,பூரம்,பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
7. நவரத்தினங்களின் பண்புகள் - வைடூரியம்
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது . நம்மை மேல்நிலைக்கு கொண்டுசெல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல் .மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும் .மனநோய்களை குணப்படுத்தும் .பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும் .மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும் .
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும் .பூர்வீக சொத்து கிடைக்கும் .நிலையான வருமானம் அமையும் .முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி,ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும் ,7 16 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும் ,2 11 20 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும்,விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!
8. நவரத்தினங்களின் பண்புகள் - நீலம்
ஞானம்,சாந்தம்,பெருந்தன்மை நற்பழக்கம்,ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம்.திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும்.பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு,சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.
நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம்,இடுப்புவாதம்,நரம்புவலி,வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும்,குஷ்ட நோயையும் குணப்படுத்தும்.வயிற்று நோயை சரிபடுத்தும்.அதிக உடல் பருமனை குறைக்கும்.இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் கும்பம் ராசிக்காரர்கள், மற்றும் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள், எண் கணித படி 8 17 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண்,பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4 13 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
9. நவரத்தினங்களின் பண்புகள் - கோமேதகம்
புத்திசாலிதனத்தையும்,கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும்.அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும்.தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும்.வாக்கு வசியம்,வாக்கு சாதுர்யம் உண்டாகும்.அரசியல் வாதிகள்,கலைஞர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.
உத்தியோக உயர்வை கொடுக்கும்,தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி,ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி,குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.
யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை,சுவாதி,சதய நட்சத்திர காரர்கள்.மற்றும் எண்கணித படி 4 13 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.

மோதிரம் அணிவது ஏன்?

தாலி: தாயாகி தாலாட்டுப்பாட, கணவன் தரும் பரிசு சின்னம். தோடு: எதையும் வெளியில் சொல்லாமல், காதோடு போட்டு வைத்துக்கொள்.

மூக்குத்தி: முதலில் சமையலை, அதன் வாசனையை அறியும் உத்தி, மூக்குக்கு உண்டு என்பதால். வளையல்: கணவன் உன்னை வளைய வளைய வர வேண்டும் என்பதற்காக. ஒட்டியாணம்: கணவன், மனைவி இருவரும், ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக. மோதிரம்: எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இந்த ஆறு நகைகளையும் அணிந்தால் தான், ஒரு பெண்ணின், பெண் தெய்வங்களின் அலங்காரம் முழுமை அடைந்ததாக பொருள். இந்த பலன்களை, பெண்களாகிய நாம் நமக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டியது தான். எந்த விரலில் அணியலாம் மோதிரம் அணிந்திருக்கும் பெண்களின் கை தான் வீட்டில், குடும்பத்தில் ஓங்கியிருக்க வேண்டும்; செல்வாக்குடன் விளங்க வேண்டும்.

மோதிரம் எந்த கையில், எந்த விரலில் அணிந்தால் நல்லது என்பதற்கு, நம் முன்னோர், சில, பல காரணங்களையும், ஆய்வாளர்கள் பல, சில காரணங்களையும் கண்டுபிடித்து, கடைபிடிக்க சொல்லியுள்ளனர். நம்முடைய நான்காவது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும். அதற்கு பெயரே, மோதிர விரல் தான். நம் ஐந்து விரல்களுமே, நம் ஐந்து சொந்தபந்தங்களை குறிக்கின்றன. சுண்டு விரல்: நம் பிள்ளைகளை மோதிர விரல்: வாழ்க்கை துணையை நடு விரல்: நம்மையே குறிக்கும். ஆள்காட்டி விரல்

: நம் சகோதரர்களை பெரு விரல்: பெற்றோரை சுண்டு விரலில்: மோதிரம் அணிவது வழக்கத்தில் இல்லை, அணிந்தாலும் இதய சக்தி ஓட்டம் தடைப்படும். மோதிர விரலில்: ஒவ்வொருவரும், கண்டிப்பாக ஒரு வளையமாவது அணிந்திருக்க வேண்டும். இதய நோய், வயிற்றுக் கோளாறுகளை தடை செய்யும். இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும். நடு விரலில்: பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை. இஸ்லாமியத்தில் நடுவிரலில் மோதிரம் அணிவதை, தடை செய்துள்ளதாக ஹதீஸ் தெரிவித்துள்ளது

. முன்பெல்லாம் நபர்களின் முகத்தை வைத்து, குணாதிசயங்களையும்; நடை, உடை பாவனைகளை வைத்து குணத்தையும்; உடம்பில் உள்ள மச்சத்தை வைத்து, சாமுத்திரிகா லட்சணத்தையும் குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். தற்போது கை விரல்களையும், அதில் அணியும் மோதிரங்களையும் வைத்தும், ஆராய்ச்சி செய்து நபர்களின் குணாதிசயங்களை கூற முடியும் எனக் கூறப்படுகிறது.

நம் நாட்டு கலாசாரப்படி, மோதிரம் மாற்றிக் கொள்வது நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தானே தவிர, அதுவே திருமணம் முடிந்ததற்கு அத்தாட்சி கிடையாது. ஆள்காட்டி விரலே சிறந்தது மாணிக்கம், முத்து, கோமேதகம், மரகதம், வைரம், வைடூரியம், பவளம் என, இத்தனை அதிர்ஷ்ட கற்களையும் தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்தில் பதித்து, மோதிரமாக, பெண்கள், இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது, உடம்புக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, நல்லது நடக்கும்படியாக நம் செயல்பாட்டினை வைத்திருக்கும்

என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. புஷ்பராகம், கனக புஷ்பராகம் கற்கள் பதித்த வெள்ளி மோதிரம், ஆள்காட்டி விரலிலும், நீலம் கற்களை பதித்த வெள்ளி, பிளாட்டினம் மோதிரத்தை நடு விரலிலும், வைடூரியம் பதித்த வெள்ளி மோதிரத்தை, சுண்டு விரலிலும் அணிகிற வழக்கமும், இப்போது பரவியுள்ளது. உடம்பில் எந்த நகையாக இருந்தாலும், இந்துக்கள் தங்கத்தில் அணியவே விரும்புகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில், வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் ஏற்றது என்பது ஒரு காரணம்

என வைத்துக் கொண்டாலும், தங்கம் எப்போதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால், நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் நம் பெண்களிடம் உள்ளது. நீள விரலின் மகிமை ஆள் காட்டி விரலை விட, மோதிர விரல் நீளமாக இருந்தால், 'ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்' என்ற மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்

. மோதிர விரலின் நீளம், அளவை வைத்து, இதயநோய், புற்று நோய், சளித்தொல்லை போன்ற நோய்கள் உள்ளனவா என்று தெரிந்து, முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும். ஆள்காட்டி விரல், மோதிர விரல், இரண்டுக்கும் உள்ள உயரம், இடை வெளியின் விகிதம் வைத்து, பாலின ஹார்மோன்களை கூட, கணக்கிட்டு கூறமுடியும் என்கிறது ஜெனிவா பல்கலைக் கழகம்.

ஆண்மையின் அடையாளத்தை நிர்ணயிக்கும், 'டெஸ்டோஸ்டிரோன்' என்ற ஹார்மோன் அளவு மிகுந்தால், மோதிர விரல் நீளமாகவும், பெண்மையை நிர்ணயிக்கும், ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகம் இருந்தால், ஆள்காட்டி விரல் நீளமாகவும் இருக்குமாம். பொதுவாக ஆள்காட்டி விரலை விட, மோதிர விரல், நீளமாக உள்ள ஆண்களைத் தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்

.மோதிரம் விரலில், மோதிரம் அழுத்தும் இடத்திலிருந்து, நரம்பு நேரிடையாக இதயத்தை போய் சேர்கிறது. ஐரோப்பிய நாடுகளில், திருமணத்திற்கு முன், இடது கை விரலில் போட்டிருக்கும் மோதிரம், திருமணத்திற்கு பின், வலது கை விரலுக்கு மாற்றப்படுமாம்.

மோதிர விரல் என, பெயர் சூட்டப்பட்டுள்ள நம் கையின் நான்காவது விரலில், திருமணத்தின் போது கண்டிப்பாக மோதிரம் போட வேண்டும். இது, வரதட்சணையாக மாமியார் போட்டாலும் சரி; நமக்கு நாமே போட்டுக் கொண்டாலும் சரி. நம் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே, நான்காவது விரலில் தான் உள்ளது

. ஆண், பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. நான்காவது விரலில் தான், திருமண மோதிரம் போட வேண்டும் என்பதற்கு, ஒரு நம்பிக்கை கதை உண்டு. விரல்களை பிரித்தால்... இரு உள்ளங்கைகளையும், நேருக்கு நேராக இருக்கச் செய்யுங்கள்

. நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள். ஏனைய விரல்களை நிமிர்த்து ஒட்ட வையுங்கள். இப்போது பெருவிரலை பிரித்துப் பாருங்கள் சுலபமாக பிரிக்க முடியும். அதாவது உங்கள் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், உங்களுடன் இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம்.

பெரு விரலை திரும்ப ஒட்ட வைத்துவிட்டு, ஆள்காட்டி விரலை பிரியுங்கள். உங்களின் சகோதரர்கள், உங்களுடனேயே இருப்பர் என சொல்ல முடியாது என்று பொருள்

. சுண்டு விரலும், இதே மாதிரி எளிதாக பிரியும். உங்கள் பிள்ளைகளும் உங்களுடனேயே இருப்பர் என நம்ப முடியாது என்பதாக அர்த்தம். கடைசியாக, மோதிர விரலை இதே மாதிரி பிரிக்க முயலுங்கள்...

கொஞ்சம் கடினம்; உடனே பிரிக்க இயலாது. இதே போல், கணவன், மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, திருமண சடங்குகளில் மோதிரம் அணிவிக்கப்படுகிறது. இது வேடிக்கையான, ஆனால், கொஞ்சம் யோசிக்க வைக்கிற, ஓர் உதாரணம்.

பார்க்க நவ நாகரிகமாக இருந்தாலும், அப்படி இரண்டு விரல்களை சேர்த்து இறுக்கி, மோதிரம் அணிவது, நரம்புகளை பாதிக்கும் என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

. ஒரு பெண், தன் வாழ்நாள் முழுவதும், நகை களை சேர்த்து, பாதுகாத்து வைக்க வேண்டிய சூழ்நிலை, இப்போது உள்ளது. கல்வி, உழைப்பு, திறமை, அறிவு ஆகியவை கைகூடும்போது, இந்த தங்க நகைகளை பற்றிய சிந்தனையும், இவ்வளவு வரவேற்பும், பெண்களிடத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே!