Search This Blog

Saturday, April 20, 2013

கருமையான முடியை பெற ஆசையா?

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது. சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம். சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.


2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.


3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.


4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.


5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.


6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.


7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.


8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.


9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.


10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

பாம்பு கடித்துவிட்டால்.,.,.

பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
"பாம்பு கடி" பற்றிய சில தகவல்கள்..

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா.. ..???
இந்த அறிகுறி விஷப்பாம்...பு கடி அல்ல...
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா.. ..??? கடித்த இடம் சற்றுதடித்து(வீங்கி)
காணப்படுகிறதா.. ?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும். ..
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது . அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல்முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகி றது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துக ின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம ்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால் , பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை"அட்மிட்" செய்வதில்லை. எனவேகால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...
கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன் ...!!!

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. 

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

Thursday, April 18, 2013

10 Porutham Meaning


1 Dina Porutham  -  Long life of the couple (living together for long).

2 Gana Porutham – Compatibility of couple and matching of their characters with each other and society.

 3 Mahendra Porutham -  Mahendra Porutham means capability of having Good children.

4 Sthree Deerga Porutham  – This denotes the Financial situation and prosperity in life.

5 Yoni Porutham - Sexual compatibility of the couple is identified through Yoni Porutham.

6 Rasi Porutham - important to lead Good peaceful family life after marriage.
  
7 Rashyaadhi Porutham (Rasi Adhipathi) – this porutham is important for the wealth of their offspring.
  
8 Vasya porutham astrology - Strong mutual physical attraction of the couple.
  
9 Rajju  Porutham – Mangalya Bakyam of the wife. It is related to the life span of boy and girl.

10 vedha porutham – Happy and joyful married life

10 Best Healing Spices and Herbs from your Kitchen


Turmeric
This golden spice, used in almost every meal in India is very valuable."It is a very powerful healer. It prevents growth of cancer cells and thus can prevent cancer,"says Mumbai-based nutritionist Naini Setalvad. Its anti-inflammato ry properties reduces swelling caused due to pain."It also said to prevent alzhiemers and said to reduce severity of pain caused due to arthritis,"says Mumbai-based nutritionist Maithili Pashtekar. This spice also acts as an antioxidant that helps lower cholesterol.

Cinnamon
Often used in coffees and other desserts, cinnamon is said to have the ability to reduce blood sugar levels."This spice contains antioxidants that help lowering levels of bad cholesterol,"says Naini. More good news for women- including this spice in your diet will also ensure less painful cycles.

Ginger
Good ol'ginger candy has always been an instant cure to motion sickness or has curbed a feeling of nausea. The spice does more than that."It improves your digestive process and prevents stomach disorders like flatulence,"says Naini. It is also said to regularize blood flow, thus maintaining your blood pressure.

Basil
Holy basil or tulsi is said to be a great de-stressor as it"reduces levels of serotonin,"Maithili says. Try a tea made of basil leaves and ginger for relief from indigestion, headaches and fever. Chewing on leaves of basil could also reduce symptoms of bronchitis and asthma.

Garlic
This condiment lowers your chances of getting cancer. Other than that, according to Naini,"it helps in lowering bad cholesterol and keeping your blood pressure in control."It also has anti viral properties and helps in clearing your sinuses."It helps to digest iron and protein,"says Maithili. Garlic is also a powerful antioxidant that protects your body against damage from free radicals.

Cumin
Cumin powder in water with salt and lemon is probably the best way to curb a diarrhoea attack."It also acts as a blood purifier and is an excellent remedy for stomach cramps,"says Naini. Due to its cooling properties, it is added to most drinks and juices during summer.

Mustard
Mustard seeds is said to curb the growth of cancer cells."it also has anti inflammatory properties and is said to restore normal sleeping patterns in women with symptoms of menopause,"says Maithili. It also reduces severity of asthma and lowers high blood pressure.

Saffron
Saffron is a powerful antioxidant too."It is said to be an anti-depressant and can cure bladder, liver and kidney disorders,"says Naini. A li'l saffron in your tea can relieve you of a cold too. Saffron also has antiseptic and anti inflammatory properties. Rubbing saffron on sore gums can provides relief.

Cardamom
Known as elaichi, this spice is also effective in curing stomach cramps. It is also said to cure other stomach disorders like flatulence and acidity."It also improves your circulation to your lungs, Maithili says. Boil water and add mint leaves and cardamom to it and have it to cure hiccups, suggests Naini.

Mint
Mint or pudina is known to ease symptoms of the irritable bowel syndrome. It is also known to have anti-fungal and anti-bacterial properties. Mint oil when rubbed on your forehead soothes headaches too. Mint paste while applied on pimples and acne can cure it
 

Drinking Coconut water has many benefits

Coconut Water is naturally
• Low in Carbs
• 99% Fat Free
• Low in sugars

Coconut water contains organic compounds possessing healthy growth promoting properties that
have been known to help


1. Keep the body cool and at the proper temperature.
2. Orally re-hydrate your body, it is an all natural isotonic beverage.
3. Carry nutrients and oxygen to cells.
4. Naturally replenish your body's fluids after exercising.
5. Raise your metabolism.
6. Promote weight loss.
7. Boost your immune system.
8. Detoxify and fight viruses.
9. Cleanse your digestive tract.
10. Control diabetes.
11. Aid your body in fighting viruses that cause the flu, herpes, and AIDS.
12. Balance your PH and reduce risk of cancer.
13. Treat kidney and urethral stones.
14. Boost poor circulation.


share it be healthy in summer

Wednesday, April 17, 2013

Top 10 social media sites that failed


அம்மை நோய் . . .

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை . . .

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள் . . .

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும்.

இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும்.

மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து . . .

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை . . .

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள் . . .

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை . . .

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை . . .

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை . . .

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி . . .

MMகீ என்ற நோய் தடுப்பு மருந்து (ஙச்ஞிஞிடிணஞு) குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு . . .

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து . . .

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

Sunday, April 14, 2013

கோடைகாலங்களில் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை அருந்தலாமா?

இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துகின்றனர்.

கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது குளிர்ந்த நீரை தான்.

இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுகின்றது என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்!..

ஒரு நாளைக்கு நாலு கேரட்...!

காய்கறி சாப்பிட அடம் பிடிக்குதா குழந்தை? குழந்தையின் அம்மா தான் அதற்கு காரணம்! கோஸ், கீரை, அவரைக்காய், பீன்ஸ் என்று பச்சை காய்கறிகளை குழந்தைகள் சாப்பிடாமல், உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என்று சாப்பிடுவது ஏன் என்று கண்டறிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், தாயின் வயிற்றில் குழந்தை இருந்தபோது தாய் என்னவெல்லாம் விரும்பிச் சாப்பிடுகிறாளோ, அது தான் குழந்தைக்குப் பிடிக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுகுறித்து தொன்றுதொட்டே சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது அமெரிக்க ஆராய்ச்சியும் உறுதி செய்துள்ளது.

இப்போது தான் கடைகளில் பச்சை காலிபிளவர் போன்று "புரோகோலி"யைப் பார்க்கிறோம். முன்பெல்லாம் இது குறித்து இந்தியாவில் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், கோஸ், காலி பிளவர், புரோகோலி ஆகியவற்றை வேக வைக்கும்போது துர்நாற்றம் ஏற்படும். இதை நீக்க பல வழிமுறைகள் உள்ளன என்றாலும், குழந்தைகளுக்கு இந்த வாசனையை முகர்ந்ததுமே, இந்த காய்கறிகளை ஒதுக்கி விடத் தோன்றுகிறது. ஆனால், குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும்போது, இதுபோன்ற காய்கறிகளைச் சாப்பிட்டாலும், குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் ஊட்டும் பருவ காலத்தில் சாப்பிட்டாலும் குழந்தைகளும் அதே காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவர். உங்கள் குழந்தைக்கு பாகற்காய் பிடிக்காமல் போவதற்கு காரணம் யார் தெரிகிறதா இப்போது?

ஒரு நாளைக்கு நான்கு கேரட் சாப்பிட்டால், ஞாபக சக்தி, "சூப்பராக" இருக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அமெரிக்க நிபுணர்கள் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், "பீடா கரோடின்" சத்துள்ள மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த 4,500 பேரிடம், ஆன்லைனில் சர்வே செய்யப்பட்டது.

அவர்கள் இதை சாப்பிட்டு வருவதால், என்ன பலன் கிடைத்துள்ளது என்று கேட்டதற்கு, நினைவாற்றல் துல்லியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெண்களை விட, ஆண்களுக்கு, "பீடா கரோடின்" சத்துக்களால், வயதான காலத்தில் மறதி நோய் வருவதில்லை என்று, நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நாளுக்கு ஒரு முறை, 50 மில்லிகிராம் "பீடா கரோடின்" அல்லது, ஒரு நாளைக்கு நான்கு கேரட்டை அப்படியே சாப்பிட்டு வந்தாலே, நினைவாற்றல் சூப்பராக இருக்குமாம்.

எப்போதும் இளமையோடு....

உங்களுக்கு எந்தப் பெரிய நோய்களும் வரக்கூடாது என்ற ஆசை இருக்கிறதா? செல்கள் மெல்லச் செயலிழந்து நடக்கும் "டிஜென ரேஜன்" மூலம் மூப்படைவதைத் தவிர்க்க வேண்டுமா? குறுக்கு வழியில் சொன்னால் எப்போதும் இளமையோடு இருக்க விரும்புகிறீர்களா? ஒரே பதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள்தான்.

இவற்றை எப்படிப் பெறுவது? நாம் சாப்பிடும் உணவிலிருந்து இவற்றைப் பெற முடியும். விஞ்ஞானிகள் அதற்கு கீழ்க்கண்ட ஐந்துஉணவுகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

1. தக்காளி

இதில் இருக்கிற "லைகோபீன் (Lycopene)" தான் முக்கியமானது. இது புற்றுநோய்களைத் தடுக்கும், தசைச் செல்களின் இழப்பைக் கட்டுப்படுத்தும், கண்களில் வரும் காட்ராக்டை தடுக்கும் சக்தி கொண்டது, நம் மூளையின் செயல்பாட்டை வழி நடத்தும் சக்தி கொண்டது என பல்வேறு வேலைகளைச் செய்கிறது.

தக்காளியை எப்போதும் எண்ணெய் சேர்த்துச் செய்து சாப்பிடுவதே நல்லது. காரணம், இந்த லைகோபீன் என்பது கொழுப்பில் கரைவது. எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் போது நம் உடல் இதைக் கிரகிக்கும்.

2. சோயா

கான்ஸரைத் தடுக்கும். கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும். எலும்புகள் தேய்ந்து உதிர்கிற "ஆஸ்டியோபோரோஸிஸ் (Osteoporosis)" என்ற நோயைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையின் போது ஏற்படுகிற பிரச்னைகளைப் பெரிதும் கட்டுப்படுத்தும். சோயாவின் பல்வேறு உடல்நலம் காக்கும் செயல்களுக்கு அடிப்படை அதில் இருக்கிற "ஐசோபிளேவினாய்ட்" என்கிற பொருள்தான். இது கிட்டத்தட்ட உடலில் இருக்கிற ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோனைப் போன்றது. சோயாவின் மற்றொரு முக்கிய அம்சம், இது உடலில் இருக்கிற கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்குமே தவிர, நல்ல கொலாஸ்டிராலைக் குறைக்காது.

3. கருப்பு சாக்லெட்

இந்த வகை சாக்லெட்டுகளில் "கோகோ" அதிகம். இதில் ப்ரோசையனிடின்ஸ், எபிகேட்சின்ஸ், கேட்சின்ஸ் போன்ற ப்ளேவினாய்டுகள் இருக்கின்றன. இவை இருதயத்தைப் பாதுகாப்பதில் சக்தி மிகுந்தவை. கான்ஸரைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா, இரண்டாம் வகை டயாபடிஸ் இரண்டையும் கட்டுப்படுத்துவதிலும் கருப்பு சாக்லெட்டுகளுக்குத் திறமை அதிகம்.

4. சிவப்பு வைன்

கொஞ்சமே, கொஞ்சம் சிவப்பு வைன் (Red Wine) இருதயத்துடிப்பைச் சீராக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நல்ல தூண்டுதல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். சிவப்பு வைனில் இருக்கிற ரெங்விரெடால், குயர்செடின் இரண்டும் இருதயப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தவிர கான்ஸரைத் தடுப்பது, அல்ஸர் வராமல் காப்பது, ஸ்ட்ரோக் தடுப்பது மற்றும் எலும்புகள் உதிர்வது போன்றவற்றைத் தடுப்பதில் சிவப்பு வைன் எப்போதும் ஒரு சின்ன ராஜா. ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமே கொஞ்சம்.

5. தேநீர்

கிரீன் டீ (Green tea) , கருப்புத் தேநீர் (Black tea) இரண்டுமே சம அளவில் நல்லது செய்வதாக சமீபத்தில் ஆய்வுகள் சொல்கின்றன. கான்ஸர் தடுப்பு, தேய்மான நோய்கள், இருதயப் பாதுகாப்பு, ஸ்ட்ரோக் தடுப்பு என தேநீரின் பாதுகாப்புப் பணிகள் மிக அதிகம்.

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்...

"கிரேக்கத்துல "கடவுளின் பானம்"னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!". திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

* "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

சோயா பீன்ஸ்

உடல் ஆரோக்கியங்களை நமக்கு வழங்கும் சக்தி கொண்ட உணவுப்பொருள் என்பது முக்கியமானது. நம்பமுடியாத நல்ல விஷயங்களை நமக்குக் கொடுக்கிறதா சோயா பீன்ஸ் (Soybeans)?

என்ன இருக்கிறது?

சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான்.

சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது.

சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது.

மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சோயா மூலம் கிடைக்கும் நேரடியான பலன்கள் என்ன?

1. உறுதியான எலும்புகள் உங்களுக்கு நிச்சயம் தொடர்ந்து நீங்கள் சோயா பால் குடிப்பதால். சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும், சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

2.மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி. நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

சோயாவில் ஐசோபிளேவோன்கள் இருக்கிறது என்கிறீர்களே? அப்படி என்றால் என்ன?

இவற்றை தாவர ஹார்மோன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடல் ஹார்மோன் போலவே செயல்படும் திறன் கொண்டவை. சோயாவில் இருக்கும் இந்த ஐசோபிளேவோன்கள் பெண்களின் முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. பருவ வயதில் அதிக சோயாவை எடுத்துக்கொள்வதால் பிற்காலத்தில் வரும் மார்புப் புற்றுநோய்கள் தடுக்கப்படும் என்று உறுதி சொல்லப்படுகிறது.

சோயா புரோட்டின் கடைகளில் கிடைக்கிறது. வாங்கும்போது இதில் கவனிக்க வேண்டியது என்ன?

கடைகளில் சோயா புரோட்டின் இரண்டு விதங்களில் கிடைக்கும்.

1. சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட்: இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கும். இது சுலபத்தில் கரையாது. நிறைய முயற்சி செய்து கரைக்க வேண்டி இருக்கும். சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பால் கொடுக்கும் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இந்த வகை நிறைய உதவும். இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முதலில் சுவை சிலருக்குப் பிடிக்காத மாதிரி இருக்கும். இரண்டாவது சிலருக்கு காற்று வெளியேறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது இதில் ஐசோபிளேவினேன்கள் அளவு குறைவாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பிரச்னைக்காக சாப்பிடும் பெண்களுக்கு இந்த சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட் உதவாது.

2. சோயா புரோட்டின் ஐசோலேட்: இதில் புரோட்டின் அளவு 90 சதவிகிதம் இருக்கிறது. கூடவே அத்தனை அடிப்படை அமினோ அமிலங்களும் உள்ளன.

சோயாவில் எந்தக் கெடுதலும் இல்லையா?

இருக்கிறது. வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின் என்கிற என்ஸைமின் வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும். தவிர உடலில் இரும்புச்சத்து கிரகிப்பை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க வைட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

சோயாவை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

சோயா பல விதங்களில் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். சிலவற்றை கீழே கவனியுங்கள்.

1. சோயாபீன்: இது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய மணிகளின் அளவில் கிடைக்கும். உலர்ந்த சோயா பீன்களை காற்றில் புகாத டப்பாக்களில் வையுங்கள். இரண்டு கப் சோயா பீன்களைத் தயாரிக்க, ஆறு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின் காலையில் வடித்து, கழுவி, ப்ரஷர் குக்கரில் மறுபடியும் 6 கப் தண்ணீர் ஊற்றி 40 நிமிடத்திற்கு குறைந்த சூட்டில் வேக வையுங்கள். இதற்குப் பின்பே உப்பு தேவை என்றால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் சோயாபீன்கள் மென்மையாவதை உப்பு தடுக்கும்.

2. சோயா பால்: தினசரி பாலைத் தவிர்த்துவிட்டு 200 மி.லி. சோயா பாலுக்கு மாறிவிடலாம். நீங்களே தயாரிப்பதில் அந்த வாசனை உங்களை குடிக்கவிடாமல் தடுக்கும். கடைகளில் கிடைக்கிற சோயா பால் நல்ல சாய்ஸ்.

3. டெக்ஸ்டர்ட் சோயா: இதுவும் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்கு மாமிசத் துண்டுகள் போலவே இருக்கும். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமான கறிகளுக்குப் பதில் இந்த வகை சோயாவை பயன்படுத்தலாம். இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கிறது. மிகக் குறைந்த கொழுப்பு, நிறைய நார்ச்சத்து மற்றும் ஐசோபிளேவினோன்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

4. டோபு: பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருக்கும். இது சோயாவை, ஜிப்ஸம் என்கிற கால்சியம் கோயாகுலன்ட் சேர்த்து கர்டிலிங் செய்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டின், வைட்டமின் "பி" நிறைந்தது. அரை கப்பில் 10.1 கி. புரோட்டின் இருக்கும். இது சாதாரண பாலில் 5.1 தான் இருக்கும். சோயா பால் மாதிரி இல்லாமல் இதில் கால்சியம் சேர்ந்து இருக்கும்.

குளிர்பதனப் பெட்டியில் ஒரு பௌல் தண்ணீரில் போட்டு வைத்துவிடலாம். ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

5. சோயா எண்ணெய்: மற்ற எண்ணெய்களைப் போல இல்லாமல் சோயா எண்ணெயில் எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லை. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

6. சோயா சாஸ்: சோயாவை ஃபெர்மென்ட் செய்து உருவாக்கப்படும் இந்த சாஸ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற சாஸ் போலவே இதைப் பயன்படுத்தலாம். இதன் ஒரு குறை, இதில் ஐசோபிளேவினோன்கள் குறைவான அளவிலேயே இருக்கும். 100 கிராம் சாஸில் 1.6 மி.கிதான் இருக்கும். கூடவே உப்பு அதிகம் கலந்திருக்கும். கவனம் தேவை.

சோயா வகை - ஐசோபிளேவினோன்

உணவு அளவு - (100 கிராமுக்கு)

1. சோயா பீன் - 200 மி.கி.

2. சோயா பால் - 35 மி.கி.

3. டெக்ஸ்டர்ட் - சோயா 92.7 மி.கி.

4. சோயா சாஸ் - 1.6 மி.கி.

வீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்கள் !!!

முத்துக்கள் பத்து !

விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்... இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்... கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்... 'கஷ்டம் இல்லை' என்கிற நிலையிலிருப்பவர்களுக்குசேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் 'முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்’மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.

2.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்!

பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் பல பொருட்களுக்கு எம்.ஆர்.பி விலையில் இருந்து சல்லிக்காசுகூடக் குறைக்கமாட்டார்கள். ஆனால், மொத்த விற்பனைக் கடைகளில், தங்கள் லாபத்தில் சிறு பகுதியை விட்டுக்கொடுத்து விலை குறைவாக விற்பனை செய்வார்கள்.

3.பெட்ரோல் சிக்கனம்!

சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து விடுங்கள். வாகனங்களை ஒழுங்காகப் பராமரித்தால் வாகன எரிபொருள் செலவு மட்டுப்படும். கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக் கொண்டிருந்தாலும் மளமள என்று எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். வெளிவேலைகளைக் குறித்து வைத்துக் கொண்டு, ஒரு முறை வாகனத்தை எடுக்கும்போதே அனைத்து வேலைகளையும் முடிக்கப் பாருங்கள். ஒரே திசையில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்கள் இருந்தால், பயணத்தையும், எரிபொருள் செலவையும் பகிர்ந்துகொள்ளுங்கள். நிழலில் வாகனத்தை நிறுத்தினால்... பெட்ரோல் ஆவியாவது பெருமளவு தவிர்க்கப்படும்.

4. 'ஸ்விட்ச் ஆஃப்’ செய்ய மறக்காதீர்கள்!

ஆளில்லாத அறைகளில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறி, விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணிப்பொறி போன்றவற்றை அணையுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மின்சாதனங்களின் ஸ்விட்ச்கள் அணைக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, மின்வெட்டு சமயங்களில் இதை நிச்சயமாக கடைப்பிடிப்பதன் மூலம், கரன்ட் போகும்போது 'ஆன்’ ஆகியிருந்த சாதனங்கள், கரன்ட் வரும்போது செயல்பட்டு மின்சாரம் வீணாவதைத் தடுக்கலாம்.

5.தவறான பழக்கத்துக்கு 'தடா’ போடுங்கள்!

உங்களது குடும்ப அங்கத்தினர் யாருக்கேனும் புகை மற்றும் குடிப்பழக்கம் இருப்பின் அதை கைவிட உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உடல் நலன் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு... இந்த பழக்கங்களுக்கு செய்யப்படும் மிக அதிகமான செலவையும் கட்டுப்படுத்தி, அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

6.தண்ணீர்... தண்ணீர்!

வேலைகளைச் செய்யும்போது குழாய்களை திறந்து வைத்துக் கொண்டு செய்யாமல், சில நொடிகளே என்றாலும்... தேவை இல்லாதபோது, குழாய்களைச் சரியாக மூடினாலே பெருமளவு தண்ணீரைச் சேமிக்கலாம். மிகச் சரியான முறையில் திட்டமிட்டுக் குளித்தால் அரை வாளி முதல் ஒரு வாளிவரை தண்ணீரே சுத்தமாகக் குளிப்பதற்குப் போதும். இதுபோல நாம் யோசித்து செயல்பட்டால், சமையலறை பயன்பாடு உட்பட பல வழிகளிலும் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

7.குண்டு பல்பு வேண்டாமே!

குண்டு பல்புகள் அதிகம் மின்சாரத்தை உறிஞ்சும். எனவே, குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் சி.எஃப்.எல். வகை பல்புகளுக்கு மாறுங்கள். இதன் மூலம் மின்சாரம் 70% அளவுக்கு சேமிக்கப்படுகிறது. சி.எஃப்.எல். பல்புகளின் ஆயுட்காலமும் அதிகம்.

8. கிச்சன் இருக்க ஹோட்டல் எதற்கு?

அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது இப்போது ஃபேஷன் ஆகி வருகிறது. வெளியில் சாப்பிட்டால் ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கும் குறைவில்லாமல் செலவு ஆகும். புத்தகம், டி.வி-யில் இடம்பெறும் தரமான ரெசிபிகளை முயற்சித்துப் பாருங்கள். நீங்களே தயாரித்தது என்ற பெருமிதமும் இருக்கும்; வெளியில் செல்லும் அலைச்சலும், பண விரயமும் தவிர்க்கப்படும். இது, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

9.நேரத்தை பணமாக்குங்கள்!

வெட்டி அரட்டை, அதிகப்படியான தூக்கம் போன்றவற்றில் விரயமாகும் நேரத்தை சேமித்து, உருப்படியான வழியில் செலவிடுங்கள். படைப்பாற்றல், புதிய தொழில் கற்றுக்கொள்ளுதல், ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ளுதல் இவற்றின் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

10.செலவு குறைக்கும் செல்போன் 'பேக்கேஜ்’!
குடும்ப அங்கத்தினர் அனைவர் கையிலும் தனித்தனி செல்போன் இருக்கும் காலம் இது. அப்புறம் வீணாக லேண்ட் லைன் தொலைபேசி எதற்கு? மேலும் குடும்ப அங்கத்தினர் அல்லது அடிக்கடி நாம் பேசும் நபர்களுடன் குறைந்த செலவில் தொடர்பு கொள்ள பலவிதமான பேக்கேஜுகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, சிக்கனமானது என்பதைத் தேர்வு

நன்றி :லதானந்த்

Function Key பயன்கள்

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.