Search This Blog

Tuesday, April 23, 2013

திருமணப் பொருத்தம்


    அகண்ட பிரபஞ்சத்தில் நம் சூரிய குடும்பத்தைப் போல பல்லாயிரக் கணக்கான சூரிய குடும்பங்களையும், நட்சத்திர மண்டலங்களையும் படைத்து அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் இயக்கி அவரவர் தேவைகளை ஈடேற்றி வைத்து,அவர் தம் பாவ புண்ணியங்களில் அடிப்படையில் கர்மங்களை நடத்தி வரும் இறைவனின் பேரருள் நம்மை வியக்க வைத்தாலும் எல்லாம் அவன் செயல் என்பது உண்மை. ஆணுக்கும்,பெண்ணுக்கும் அவர்களின் ஜென்ம லக்கினம் நிர்ணயம் ஆகும் பொழுது அவர்களின் ஏழாம் இடமும் நிச்சயிக்கப்படுகிறது.

    ஏழாமிடமும் நிச்சயம் செய்தவுடன் அவர்களின் திருமண வாழ்க்கையும் உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்பதும் உண்மை. இந்த ஏழாமிடத்தத்துவம் 7க்கு 7ஆகிய லக்னம் என்ற உயிர் 8ன் 7க்கு 8 என்ற தனவாக்கு குடும்ப ஸ்தானமாகவும் இருப்பதே ஆண்டவன் படைப்பின் அதிசய ரகசியம் நமக்கு புரியும்.இதில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் 7ம் இடத்துக்கு 1மிடம் இணையும்போது 1க்கு 2மிடமும்,7க்கு 2ம் இடமும் சுபிட்சம் அடையுமா என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டியது மட்டுமே.இந்த சூட்சமும் ஆண்டவனின் அருள் பெற்றவர்களால் இந்த படைப்பின் பிரம்ம ரகசியம் அறிந்துணர்ந்து உரைக்கப்படும் என்பது இறைவன் கட்டளை.

    இது உலக நன்மைக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் விதி.நல்ல செழிப்பான நிலத்தில்,நல்ல வீரியமுள்ள விதை விழும் பொழுது மிகவும் பயனுள்ள மரங்களும் செடி கொடிகளும் ஆயுள் கால நிர்ணயப்படி நிலைத்த பலன் கொடுத்து மக்களை மகிழ செய்து தலைமுறைகளுக்கு கால காலங்களுக்கு பயனளிக்கின்றன.நம் மனித வாழ்விலும் நல்ல தலைமுறைகளை உருவாக்கி உலகத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு பாடுபடவும் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்கவும் வரும் தலைமுறைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து காட்டி அவர்கள் வாழ வழி காட்டவும் நாம்(இரண்டு பேரை)ஆணையும்,பெண்ணையும் இணைக்க திருமண என்ற ஆயுட்கால பந்தம் ஏற்படுத்தி அதை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம்.

    நமக்கு நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டது. இன்று விஞ்ஞான முன்னேற்றத்தில் நாம் சந்திரமண்டலம், செவ்வாய் மண்டலம் என்று அரிச்சுவடி நிலையில் இருக்கிறோம். இவை விஞ்ஞானிகள் நம் முன்னோர்கள் அருளிக் கொடுத்ததில் இருந்து தெரிந்து கொண்ட சில விஷயங்கள். அதன் அடிப்படையில் ராக்கட் உருவாக்கி பிரபஞ்ச ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் நம் மூதாதையர்கள் யோகம்,தவம்,அஷ்டமா சித்தி ஆகிய வித்தைகள் மூலம் மேலே பிரபஞ்சத்தில் சஞ்சரித்து கிரக நிலைகளையும் ஆராய்ந்து உணர்ந்து உருவாக்கி நமக்கு அருளியதுதான் இந்த ஜோதிடம். நம் வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான திருப்பு முனையாக அமையக் காரணம்,அது நம் தலைமுறை உருவாக்கக் காரணமாக இருப்பதே. வாரிசுகளும், தலைமுறைகளும், இனப் பெருக்கங்களும் மனித,மிருக,தாவர மற்றும் இயற்கையின் பிள்ளைகளான மழை,காற்று,பூமி,ஆகாயம்,நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களும் இந்த கடமையை ஆண்டவன் கட்டளையாக எண்ணி செயல்படுகின்றன

இந்த செயல் பூமியின் சமன்பாட்டை சரிசெய்யவே உண்டாக்கப்பட்ட நியதி.
    "விநாச காலே விபரித புத்தி" என்பது போல நாம் அழிய வேண்டும் என்ற விதி இருந்தால் நம் எண்ணத்தில் நல்ல எண்ணங்கள் தோன்றாது என்பதே சாஸ்திரம். நாம் இந்த மண்ணில் குரூரமான வாரிசுகளை உருவாக்கி விட வேண்டும் என்ற விதி இருந்தால் நமக்கு இந்த ஜோதிட அறிவு வேலை சேய்யாது. நம் கண்களை அறிவையும் முடக்கி தவறான சேர்க்கையினால் பஞ்சமா பாதங்களை செய்யக் க்ஷடிய குழந்தைகளை இந்தப் பூவுலகிற்கு வழங்கி விடுகிறோம். நமது இந்தச் செயல்களால் பல தலைமுறைகளை நாம் பாவம் செய்வதில் ஈடுபட செய்கிறோம். பின்னர் இதிலிருந்து வெளியே வராமலேயே நாம் மட்டும் அல்லாது நம் தலைமுறையினரையும் நாசம் செய்கிறோம்.

    இதுவும் ஆண்டவன் செயல்தான் என்றாலும், ஆண்டவனை மறந்து, அவனை நிந்தித்து, அவன் வகுத்துக் கொடுத்த விதிமுறைகளை மறந்து நாம் நம் சுய முடிவுகளை எடுக்கும் போது வரும் விளைவுகளும் நம்மையே சாரும் என்பதால் நம் தவறுகள் நம்மோடு நில்லாமல், நம் தலைமுறைகளையும் பாதித்து விடுகிறது. இப்படித்தான் கலியுகம் தோன்றியது. இதில் இன்னும் வேகமாகச் செல்லும் மிகப் பெரிய பிரளயத்திற்கு வழிவகுக்கும்.

    இதில் இருந்து நாம் தப்ப ஆண்டவன் பாதம் பிடித்து அவன் வகுத்து கொடுத்த நியதிகளை கடைப்பிடித்து இந்த திருமண பொருத்தம் நூலில் குறிப்பிட்ட விதிகளை கடுமையாக கடைப்பிடித்து தங்கள் துணையை தேர்ந்தெடுத்தால் நாமும் சுகமாக வாழ்ந்து, தலைமுறைகளையும் சுகமாக வாழ வைக்க முடியும் என்பது திண்ணம்


1.ரஜ்ஜு பொருத்தம்:

இந்த பொருத்தம் இல்லை என்றால் ரத்தத்தின் தன்மை வேறுபட்டு தலை, சொட்டை, முடிகொட்டுதல், புத்தி மாறாட்டம், வேதக்கயிறு உண்டாகும்.

இவைக்கான சேரக்கூடாத நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம்- சித்திரை- அவிட்டம்.

    அ) வயிறு ரஜ்ஜு:

வாயுக் கோளாறு, வயிற்று உப்புசம், உடல் இளைத்தல், ஜீரணக் கோளாறு, அல்சர் போன்ற நோய்கள் உண்டாகும்.

இவற்றுக்கான நட்சத்திரம்:

கார்த்திகை- புனர்பூசம்- உத்ரம்- விசாகம்- உத்ராடம்- பூரட்டாதி.

    ஆ) கழுத்து ரஜ்ஜு:

கழுத்துக் கழலை உணவுக் குழாய் பாதிப்பு, காது ஆகிய நோய்கள்.

இவற்றுக்கான சேரக்கூடாத நட்சத்திரம்:

ரோகிணி- திருவாதிரை- அஸ்தம்- சுவாதி- திருவோணம்- சதயம்.

     இ) துடை ரஜ்ஜு:

துடை சம்பந்தமான வியாதிகள்.

இவற்றுக்கான நட்சத்திரங்கள்:

பரணி- பூசம்- பூரம்- அனுஷம்- பூராடம்- உத்ரட்டாதி.

    ஈ) பாதம் ரஜ்ஜு:

யானைக்கால், பாதம், கழுத்து பாலம் பாலமாக வெடித்தல் போன்ற நோய்கள்.

இவற்றுக்கான நட்சத்திரங்கள்:

அசுவதி- ஆயில்யம்- மகம்- கேட்டை- மூலம்- ரேவதி.எனவே இந்தப் பொருத்தம் மிக முக்கியமானது.


2.யோனிப் பொருத்தம்:

இதுவும் மிகவும் முக்கியம். கணவன் மனைவி சேர்க்கை சரியான பொசிசன்ஸ் அமைந்து திகட்டாத இன்பம் அளிக்க இந்த பொருத்தம் அவசியம். இந்த பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்தியம் இனிக்காது என்பதில் சந்தேகம் இல்லை.

3.வசியப் பொருத்தம்:

கணவன் மனைவிக்கு ஒருவர் மேல் ஒருவருக்கு இனம் புரியாத ஒரு கவர்ச்சி இருக்க வேண்டும்.சாதாரணமாக ஒரு பொருளையோ, ஒரு நபரையோ அல்லது செயலையே தொடர்ந்து பார்க்கும் போதும், ஈடுபடும் போது சலிப்பு வருவது இயற்கை. அந்த சலிப்பு வராமல் ஆயுட்காலம் முழுவதும் சேர்ந்து வாழ வசியப் பொருத்தம் அவசியம்.

4. நாடிப் பொருத்தம்:

மனிதனின் உடல் நிலை நன்றாக இருக்கிறதா என்று பார்க்க நாடிப்பிடித்து பார்ப்பது மருத்துவர்களின் செயல். கணவன் மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கையில் நோய் நொடிகள் வராமல் இருக்க இந்த நாடிப் பொருத்தம் அவசியம்.

நாடி அடங்கி விட்டால் எப்படி உயிர் பிரிந்து விடுகிறதோ அது போல் நாடிப் பொருத்தம் இல்லாமல் போனால் வாழ்க்கை நோய்களுக்கு இரையாகி விடும்.

5. கணப் பொருத்தம்:

கணவன் மனைவி ஒற்றுமையாக ஐக்கியப்பட்டு வாழ இப்பொருத்தம் அவசியம்.

6. தினப் பொருத்தம் :

ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய தினப் பொருத்தம் அவசியம்.

7. மகேந்திரப் பொருத்தம் :

புத்திரமும், புத்திரர்களால் உண்டாகும் செல்வமும் கிடைக்க செழிப்பாக வாழ்க்கை அமைய மகேந்திரப் பொருத்தம் அவசியம்.

8. ராசிப் பொருத்தம் :

கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அடைய ராசிப் பொருத்தம்.

9. ராசி அதிபதி பொருத்தம் :

தம்பதியர்கள் அவர்களுக்காக செய்யும் காரியங்களின் பலன் முழுமையாக கிடைக்க ராசி அதிபதி பொருத்தம் அவசியம்.

10.ஸ்திரீ தீர்க்கம் :

சிறந்த இல்லறம் அமைய ஸ்த்ரீ தீர்க்கம் அவசியம்.

11.வேதை பொருத்தம் :

கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இந்த வேதையை அறிய வேண்டும். இல்லை என்றால் ஒரே கருத்து இரண்டு பேருக்கு என்றாலும் அதை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிரந்தரமான கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.

இனி சந்தோஷமாயிருந்த தம்பதியினருக்குள் திடீரென்று பிரச்சனைகள் உருவாகக் காரணம் என்னவென்று, அது எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் பார்க்கலாம். எலியும் பூனையுமாக இருந்த தம்பதியினர் இப்பொழுது மனமொத்தவர்களாக இருப்பது எப்படி?

இதற்கு காரணம் தசா பொருத்தம் வேதை ஆவதுதான் காரணம். மனைவியின் நடப்பு திசை கணவனின் திசைக்கு சத்ரு திசையாக இருந்தாலும், கணவனின் நடப்பு திசை மனைவியின் திசைக்கு சத்ருவாக இருந்தாலும் இந்த தற்காலிக பிரிவு உண்டாகும்.

இதை தவிர்க்க முடியாது. ஆனால் தெரிந்து இந்த வேறுபாடு பெரிதாகாமல் சிறிய நிலையியே கட்டுப்படுத்தி அனுசரித்து செல்லலாம்.

1 comment:

  1. enudaya pirantha neram october 1, 1992, 4.20A.M. peyar nithya, anusham natchathiram viruchiga raasi, simma laknam. en mama murugesan april 8, 1986, 3.00P.M ku meena raasi, uthiratathi natchathiram, simma laknathil piranthar. engaluku natchathira porutham paarkaiyil rajju porutham ilathathal thirumanam seiya mudiyathu nu soldranga. aana naangal oruvarai oruvar romba nesikirom.. ithuku ethavathu parigaram seithu thirumanam seiya mudiyuma?

    ReplyDelete