Search This Blog

Sunday, June 23, 2013

கட்டிடக்கலையில் இன்று

கட்டிடக்கலையில் இன்று உள்ளது போல் பல்வேறு வகையான கட்டிடங்கள் இதர அமைப்புகளை வடிவமைப்பது தொடர்பாக நமது பழந்தமிழர் கட்டிடக்கலையிலும் வகைப்படுத்தபட்டுள்ளது.

• சிறு குடியிருப்புகள் வடிவமைத்தல்
• கிராமங்கள் அமைத்தல் ( 12 வகை )
• நகரத்தை திட்டமிடல் மற்றும் வடிவமைத்தல் ( 7 வகை )
• பெரு நகரங்கள் வடிவமைத்தல் (20 வகை )
• கோட்டை வடிவமைத்தல் (12 வகைகள் )
• கோவில்கள்
• அரண்மனை (அ) அரச மாளிகை வடிவமைத்தல்
• அரண்மனை முகப்பு அமைத்தல் (அதாவது படைகள் அணிவகுத்து நிற்க மற்றும் அரச விழாக்கள் கொண்டாட )
• பிற வகை மாளிகைகள்
• அரியணை ,அரசகட்டில், சிம்மாசனம் வடிவமைத்தல்
• நீதி மற்றும் ஆட்சிநிர்வாக மன்றங்களை அமைத்தல்
• கருவூலமனை ( அ ) பண்டாரம் களம் அமைத்தல் ( அரண்மனைக்குள்ளும் வெளியிலும் )
• படைக்கலசாலை ( அ ) படைக்கொட்டில் அமைத்தல்
• பல்கலைகழகம் (சர்வகலா சாலை) மற்றும் கல்லூரி அமைத்தல்
• ஏடகம் ( காகிதம் வருவதற்கு முன்னர் ) அதாவது நூல் நிலையம் அமைத்தல்
• பெரு விருந்து மாளிகைகள்,
• மன நிறைவு கொடுக்கத்தக்க புகலிடங்கள் அமைத்தல் ( இளவேனில் வசந்த காலத்தில் பயன் படுத்த )
• வாயில்கள் ( 12 வகை)
• நகர மற்றும் பிற அலங்கார வளைவுகள் ( 3 வகை )
• கோபுரங்கள் அமைத்தல்
• சிறப்பு பயன் மன்றங்கள் ( சங்கம் )
• இளவரசர் மற்றும் அமைச்சர்கள் மாளிகைகள் அமைத்தல்
• தனி வீடுகள்
• பல தளங்கள் கொண்ட மன்றங்கள்
• நாடக மற்றும் இசைச்சாலை அமைத்தல்
• விளக்கு தூண்கள்
• கூரை வேய்தல்
• தனிய களஞ்சியம்
• சாலைகள் அமைத்தல் ( ராஜா வீதி முதலானவை )
• ஓய்விடங்கள்,ஆயுதம் தாங்கிய காவலர்கள் அரண் மற்றும் போர்க்கால புறக்காவல் அரண்கள் அமைத்தல்
• அழகு மாளிகைகள்
• தெய்வ படிமங்கள்
• தேர்கள் வடிவமைத்தல்
• சிறு குளங்கள் அமைத்தல்
• பெரிய நீர் நிலைகள் ( தடாகம் ) அமைத்தல்
• செல்ல பிராணிகளுக்கான பூங்காக்கள்
• குதிரைகள் நிறுத்துமிடம்
• யானைகள் நிறுத்துமிடம்
• 100 முதல் 1000 கால்கள் உடைய மண்டபங்கள் அமைத்தல்.

No comments:

Post a Comment