Search This Blog

Thursday, April 11, 2013

மாங்காயின் மருத்துவக் குணங்கள்...

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட:

வாய், நாக்கு இவைகளில் புண் வந்தால் எந்த உணவையும் சாப்பிட முடியாது. பப்பாளி மரத்தின் பிஞ்சுக் காயை மேலே சீவி விட்டால் அதிலிருந்து கசியும் பாலைத் தொட்டு புண்ணின் மேல் காலை, மாலை தடவி வந்தால், மூன்று நாட்களுக்குள் வாய்ப்புண் ஆறிவிடும்.

பேன் தொல்லை தீர:

தேங்காய் எண்ணெயில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டு அதைத் தலைக்குத் தேய்த்துச் சிறிது நேரம் அப்படியே தலையில் ஊறவிட்டுப் பிறகு தலையை அலசிக் குளியுங்கள். பேன் ஒழிந்துவிடும்.

எலுமிச்சை இலைகளை நசுக்கி சாறெடுத்து தண்ணீருடன் கலந்து சிறிது உப்புப் போட்டுக் குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.

சிலருக்கு தலையில் நீர்க்கோர்த்து தலைவலி பாடாய்படுத்தும். ஒரு ஸ்பூன் காப்பி பொடியை கொதிக்கும் நீரில் போட்டு உடனே ஆவி பிடித்தால், பத்தே நிமிடத்தில் தலைவலி பறந்து போய்விடும்.

மாங்காயின் மருத்துவப் பயன்கள்:

பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை.

நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும்.

மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.

வெயில் புண்ணால் ஏற்படும் அவதி:

கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினிகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம்.

அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினிகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில்.

No comments:

Post a Comment